Thursday 14 March 2013

பாடல்கள் 31-60 தொகுப்பு



பாடல்கள் 31-60  தொகுப்பு

·         பாடல்–31 எவ்வித பாடுமற்ற, கர்மமற்ற, பரமனது மந்திர உச்சாடனம் தணிந்த குரலில் இருக்கவேண்டும்.
·         பாடல்-32 தேங்காயில் இளநீர் புகுந்ததைப்போல இறைவன் என்னுள் புகுந்தபின் நான் உலகில் மக்களின்முன் வாய்திறப்பது இல்லை.
·         பாடல்-33 வண்டின் எச்சிலை உடைந்த கல்லின்மீது ஊற்றுகின்ற மக்களே! இறைவன் தன்னைப் பற்றி நான் சந்தேகமற அறிய குருவின் பாதத்தில் என்னை இட்டானோ?
·         பாடல்-34 கோயிலும் குலமும் மனத்துள் இருக்கின்றன. அவை தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை.
·         பாடல்-35 இறைவன் உலோகத்திலும் மற்ற பொருட்களிலும் இல்லை. மனத்தினுள் இருக்கின்றான்.  அதை உணர்ந்தால் அவன் நமது மனவெளியில் ஆடுவான்.
·         பாடல்-36 பூஜை என்று காலத்தை வீணடிப்போரே! யார் பூஜையை ஏற்றுக்கொண்டது? ஆதியா அனாதியா? எது?
·         பாடல்-37 விபூதி தரித்து மந்திரங்களை ஓதும் மக்களே! இறையன்பினால் மனத்தை உருக்கி நம்முள் கலந்த ஜோதியின் உண்மை நிலையை அறிந்தால் இடைவிடாது அச்சோதியுடன் இருக்கலாம்.
·         பாடல்-38 பாத்திரத்தில் வைத்த நீர், தீ மூட்டியபோது எங்கே மறைகிறது? ஐம்பூதங்கள் என்பவை என்ன? மனத்தின் மாயத்தோற்றம்தான். பொருட்களை உருவாக்குவதும் அழிவுறச்செய்வதும் மனம்தான்.
·         பாடல்-39 ஜாதிக் குறிகள் எலும்பிலுள்ளனவா தோலில் உள்ளதா? பறைச்சியின் போகமும் பணத்தின் போகமும் வெவ்வேறா? பகுந்து பாருங்கள்
·         பாடல்-40 வாயில் குடித்த நீர் எச்சில் என்றால் வாயால் கூறும் வேதமும் எச்சிலல்லவா? எவ்வாறு நீரைக் குடித்து நீரைப் போக்குவது?
·         பாடல்-41 வேதம், மந்திரங்கள், அறிவுகள், உலகங்கள் நாதம் பிந்து, மதி அனைத்தும் எச்சில்தான் எதில்தான் இறைவனின் எச்சில் இல்லை?
·         பாடல்-42 பிறப்பதற்கும் முன்பும் இறந்தபின்னும் நாம் இருக்கும் நிலை என்ன?  சரியாகக் கூறாவிடில் காதைப் பஞ்சாட்சர மந்திரத்தால் அறுப்பேன்
·         பாடல்-43 குச்சியினால் அம்பலத்தை ஆட்டுவிக்க முடியாது, கடலைக் கலக்க முடியாது.  புலனின்பமற்று இருக்கும் யோகியை ஒருநாளும் மாயை என்ற இருள் சூழ முடியாது.
·         பாடல்-44,45 சித்தம், சிந்தை, சிவன், சக்திசம்பு, முக்தி, மந்திரங்கள் என்பவை எவை? இவையனைத்தையும் ஈன்ற வித்தே இறைவன்
·         பாடல்-46 உயிர்கள் என்பது அசைவுள்ள நீர்தானே. காதணிகள் பலவானாலும் அவற்றின் மூலப்பொருள் பொன் ஒன்றுதானே.
·         பாடல்-47 பால் கறந்த பின் முலையினுள் புகாது, வெண்ணெய் மோரினுள்ளும்,சங்கின் ஓசை அதனுள்ளும்,உதிர்ந்த காய் மரத்துள்ளும், விரிந்த பூ மொட்டு நிலைக்கும் திரும்ப மாட்டா.  ஞானம் போற்ற யோகி மீண்டும் சம்சாரத்தில் பிறப்பது இல்லையே.
·         பாடல்-48 தூமை- தீட்டு, கருவறையில் கிடந்தபோதும், பிறந்தபோதும் தீட்டு என்றால் எவ்வாறு இறைவனுடன் சேருவது?
·         பாடல்-49,50 தூமையான வாலை இருக்க உள்ளே தீட்டு எவ்வாறு வரும்? தூமையே திரண்டு குருக்களாயிற்று.
·         பாடல்-51 புரட்டும் பித்தலாட்டமும் இறைவனைக் காட்டாது. பொய் இல்லாத சிந்தையால்தான் உள்ளிருக்கும் இறைவனை உணர முடியும்
·         பாடல்-52 ஆட்டைக் காட்டி வேங்கையைப் பிடிப்பதைப் போல என்னை செல்வத்தைக் காட்டி உலகில் கட்ட வேண்டாம்.  வீடுபேற்றைக் காட்டி என்னை வெளிப்படுத்து யானைத் தோலை அணிந்த இறைவா!
·         பாடல்-53 சந்திரகலையும் சூரிய கலையும் கண்ணில் கையில் சங்கு சக்கரம் சூலம், மழு நீண்ட முடி ஆடிய பாதம் இவ்வாறு உடலினுள் இறைவன் கலந்துளான். 
·         பாடல்-54 உப்பும் நீரும் கலந்தால் இரண்டும் சேர்ந்த உப்புநீராகும், தனியாக இருப்பதில்லை. ஈசனும் மாலும் ப[பரம்பொருளில் கலந்துள்ளனர். வித்தியாசம் பேசுவோர் வாய் புழுத்து மடிவர்.
·         பாடல்-55 சிற்றம்பலத்தில் ஆடுபவனும் மனவரங்கத்தில் ஆடுபவனும் ஒருவனே. அவனே உலகமும் முக்தியும். 
·         பாடல்-56 எல்லா உயிர்க்கு தந்தையான் இறைவன் வித்திலே முளைக்கும் ஜோதி.  அவனைப் பற்றிய தெளிவு ஏற்பட்டபின் எல்லாம் அடங்கிவிடும்.
·         பாடல்-57 அறிவு தரும் நூல்கள் நம்முளேபற்றை அறுத்து நம்முள் இருக்கும் மிருகத்தைக் கட்டுப்படுத்தினால் இறைவன் நம்முள் நமது சொந்தமாக வாழ்வான்.
·         பாடல்-58 ஓம் நமச்சிவாய என்பதே எல்லாம். ராம நாமத்தைச் ஜெபிப்பீர்.
·         பாடல்-59 உலகம் தோன்றக் காரணமான அகாரமும் உகாரம் படிப்பின்போது ஒற்றை எழுத்தை விட்டு நின்றதா?
·         பாடல்-60 அனைத்துமாக இருக்கும் இறைவா! நான் நின் கழலை மறந்தாலும் நீ என்னுள் குடிகொள்.

No comments:

Post a Comment